இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
தனுஷை வைத்து வெற்றி மாறன் இயக்கிய ஆடுகளம் படம் வெளியானது 2011 ஆம் வருடம் ஜனவரி மாதம். ஏறக்குறைய நான்கு வருடங்களாகியும் அடுத்தப் படத்தை இயக்காமலே பணம் பார்த்து வருகிறார் வெற்றிமாறன். ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்குவதாக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அடுத்த படம் நம்ம படம்தான் என்று சொல்லி வருகிறார்.
இந்நிலையில் சூதாடி படத்துக்கு முன்பாக விசாரணை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் கதையின் நாயகனாக நடிக்க, பொறியாளன் மற்றும் கயல் பட ஹீரோயின் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்கிறார். சூதாடி படத்தை தயாரிக்கும் தனுஷே இந்தப் படத்தையும் தயாரிக்கிறாராம். விசாரணை படம் வழக்கமான படங்களைப்போல் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல் ஒரு மணி, ஒன்றரை மணிநேரத்துக்குள் முடியும் படமாம். இந்த படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே அடிபட்ட வந்தநிலையில் தற்போது அத்தகவல்களை உறுதி செய்திருக்கிறார் வெற்றிமாறன். இப்போது தான் நடிகர், நடிகைகள் எல்லாம் தேர்வாகி படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர் என்றும், இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி இருக்கிறார் வெற்றிமாறன்.