ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வீராச்சாமி படத்தில் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பத்து பத்து, உனது விழியிலே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விபசார வழக்கு, தன்னிடம் உல்லாசம் அனுபவித்த தொழில்அதிபருடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியது உள்ளிட்ட விவகாரங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தது என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்தவர் மாடலிங் அழகியும், நடிகையுமான பத்மா நாராயணன். இவர் தனது பெயரை லஸ்யா என மாற்றிக் கொண்டு புழல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
அம்மணிக்கு சமீபமாக குடல்வால் ஆபரேஷன் நடந்திருக்கிறது. அதை ரகசியமாக செய்துகொண்டு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்கும் லஸ்யா கூடிய விரைவில் கவர்ச்சியில் நமீதா இடத்தை பிடிப்பேன் என சபதம் செய்திருக்கிறாராம்.
நமீதாவிற்கும், லஸ்யாவிற்கும் நிறையவே ஒற்றுமை! உருவத்தில் மட்டுமல்ல... நமீதா மாதிரி லஸ்யாவிற்கும் தாய்மொழி குஜராத்திதான். ஆனால் தந்தைமொழி மட்டும் கும்பகோணம் தமிழ் என்பது கூடுதல் சிறப்பு. மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் என கால்டஜன் கவர்ச்சி ஆட்சி புரியவிருக்கும் லஸ்யா, தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளில் இருந்த நீதிமன்றம் வாயிலாக கடந்த ஆண்டே விடுதலை ஆகி விட்டேன் என்கிறார்.