ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கும் ஐ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றபோது... திருஷ்டிப்பரிகாரமாக பல சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று...அனிருத்துக்கு ஏற்பட்ட அவமரியாதை. புறத்தோற்றத்தில் சின்னப்பையன்போல் இருந்தாலும், அனிருத் இன்றைய தேதியில் முன்னணி இசையமைப்பாளர். இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத்.
அந்தளவுக்கு தமிழ்த்திரை உலகில் முக்கியமானவராக விளங்கும் அனிருத்தை அழைத்து ஐ படத்தில் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஐ படத்தில் இடம்பெற்ற பாடல்களை, அதே பாடகர்களை வைத்து ஐ இசைவெளியீட்டு விழாவில் பாட வைத்தார்கள். அப்படி பாடுவதற்காக அனிருத்தை மேடைக்கு அழைத்தபோது, அர்னால்டை விட பெரிய பாடி பில்டர் நம்ம ஊரில் இருக்கிறார். இப்போது அவரை அழைக்கப்போகிறேன் - என்று கிண்டலாக சொல்லிவிட்டு அனிருத்தை அழைத்தார் சின்மயி.