ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ஐ' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக விலைக்குப் போக வாய்ப்புள்ளதாக சில தினங்களுக்கு முன்பே நாம் சொல்லியிருந்தோம். சுமார் 30 கோடி ரூபாய் வரையில் அப்படத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது தெலுங்குத் தயாரிப்பாளரான என்.வி.பிரசாத் இப்படத்தை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அந்த விலை கொடுத்து வாங்கியிருந்தால் அதுதான் தெலுங்கில் விற்கப்பட்ட ஒரு தமிழ்ப் படத்தின் அதிக பட்ச டப்பிங் விலையாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் டப்பிங் உரிமை சுமார் 27 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீண்டும் ஷங்கர் இயக்கத்திலேயே உருவாகியுள்ள படமான 'ஐ' படம் அந்த சாதனையை முறியடித்து 30 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தமிழ்ப் படம் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட்டால், அந்தப் படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதிக பட்சம் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகும் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க 'ஐ' படம் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை வசூலிப்பது கடினம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், ஷங்கர் படம் என்பதால் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது. அப்படி அந்தத் தொகையை 'ஐ' படம் வசூலித்துக் கொடுத்து விட்டால் அது மிகப் பெரிய வசூல் சாதனையாக அமைந்துவிடும் என்கிறார்கள்.
அட்ரா சக்கை அட்ரா சக்கை என்பது இனி 'ஐ'ட்ரா சக்கை 'ஐ'ட்ரா சக்கை ஆகிவிடுமோ...