பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மெகா படங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில், விஷாலுடன் பூஜை படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து விஜய்யுடன் சிம்புதேவன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். அதையடுத்தும் சில முன்னணி ஹீரோ படங்களில் ஸ்ருதியை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு மெகா படத்தில் இருந்து நான் நீககப்பட்டுள்ளேன் என்று டுவிட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ருதி. அவர் மெகா படம் என்றதும் அது விஜய் படமாகத்தான் இருக்குமோ என்று மீடியாக்கள் யூகித்து செய்திகள் வெளியிட்டன. ஆனால் இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
நான் மெகா படம் என்று சொன்னது தெலுங்கில் ஆகடு படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவுடன் நடிக்கயிருந்த படம்தான். இப்போது ஆகடு படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடுகிறேன். இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கு என்னிடம் தான் கால்சீட் கேட்டிருந்தனர். ஆனால், அட்வான்ஸ் வாங்கும் கடைசி நேரத்தில் எனக்குப் பதிலாக தமன்னாவை புக் பண்ணியுள்ளனர். அதைத் தான் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தேன் என்று விளக்கமளித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.