ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஜீவா. வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை எடுத்தவர். இதில் கிரிக்கெட்டை எடுக்கிறார். நிஜத்திலும் கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், இதில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். இமான் இசை. மதி ஒளிப்பதிவு.
படத்தின் கதையை பற்றி சுசீந்திரன் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் உயிராக மாறிவிட்டது. இங்குள்ள எல்லோருக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரனோ, ரசிகனோ இருக்கிறான். துடிப்பான இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார்கள். செலக்ஷன் அரசியலில் அடிப்பட்டு கிரிகெட்டையே மறந்துடுறாங்க. கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியருத்தனோட வலிதான் படம்.
50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையை தேடி எங்கே போவான் அதை பேசுகிற படம்.
எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துபோவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்து போறாங்க. அதைத்தான் படம் பேசப்போகுது. என்கிறர் சுசீந்திரன்.