ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரே ஒரு வெற்றி, ஓஹோன்னு வாழ்க்கை...இது சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பொருத்தமானது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசூல் வெற்றி அவரை முன்னணி நாயகர்கள் பட்டியலில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது. அதன் பின் வந்த 'மான் கராத்தே' படமும் முதலுக்கு மோசமில்லாமல் லாபத்தைக் கொடுத்துவிட்டது. அதே வரிசையில் அவருடைய 'காக்கிச் சட்டை' படமும் இடம் பெற்று விடும் என்கிறார்கள். 'டாணா' படத்தைத்தான் தற்போது 'காக்கிச் சட்டை' என பெயரை மாற்றி விட்டார்கள். இந்தப் படத்தின் பாடல் காட்சி தற்போது நார்வே நாட்டில் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன், இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்கும் 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால், 'அஞ்சான்' படத்தின் தோல்வி லிங்குசாமி நிறுவனத்தை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டதாம். சுமார் 50 கோடி வரை செலவு செய்து படத்தை எடுத்து ஆரம்பத்தில் யு டிவி நிறுவனத்திற்கு விற்றவர்கள், கடைசி நிமிடத்தில் அவர்களே படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் படம் நிறையவே கையைக் கடித்து விட்டதாம்.
அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' என்ற பெரிய படம் வேறு இருப்பதால், இப்போதைக்கு இருக்கும் படங்களை எந்த சேதாரமும் இல்லாமல் வெளியிட்டு விட்டு, புதிய தயாரிப்புகளை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். ஏற்கெனவே, 'இடம் பொருள் ஏவல், ரா ரா ராஜகேசர் உட்பட ஒரு சில படங்களையும் தயாரித்து வருவதால் மற்ற படங்களுக்கும் நெருக்கடி வரக் கூடாது என்று நினைக்கிறார்களாம். அதற்குள்ளாக சிவகார்த்திகேயன் வேறு படத்தில் நடிப்பாரா அல்லது கொஞ்சம் இடைவெளி விடுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.