ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இனிது இனிது என்ற படத்தில் அறிமுகமான ரேஸ்மிக்கு தேனீர் விடுதி இரண்டாவது படம். அதையடுத்து, பெரிய ஹீரோக்களுடன்தான் அடுத்து நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த ரேஸ்மி, ஐந்தடிக்கும் குறைவான உயரம் கொண்டவர் என்பதால் அவரது முயற்சிகள் எதுவும் அவருக்கு பலன் கொடுக்கவில்லை. உயரத்தை காரணம் காட்டியே இயக்குனர்கள் அவரை பின்தள்ளி விட்டனர்.
அதனால் இப்படியே இருந்தால் நம்மை திரையுலகம் மறந்து விடும் என்று முடிவு செய்து இப்போது பர்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல்தான் நாயகன். கார் சேஸை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை வேட்டை நடத்தியபோது, தமிழ் தெரிந்த நடிகைதான் வேண்டும் என்ற முடிவில் இருந்தார்களாம்.
காரணம், மொழி தெரியாத நடிகைக்கு, அவர் கேமரா முன்பு நின்று நடிக்கும்போது, இன்னொருவர் அவருக்கு பின்னாடி நின்று அவர் பேசக்கூடிய வசனத்தை சொல்ல வேண்டும். அதை காதில் வாங்கியபடி அந்த வசனத்தை அவர் ரிப்பீட்டு செய்து நடிப்பார்கள். ஆனால் அப்படி நடிக்க வைப்பதை விரும்பாத பர்மா பட டைரக்டர் தரணீதரன், தமிழ் தெரிந்த நடிகைக்கே சான்ஸ் கொடுப்பேன் என்று இருந்தபோதுதான் ரேஸ்மிமேனனின் போட்டோ அவர் கண்ணில் பட்டிருக்கிறது
ஏற்கனவே இரண்டு படங்களில நடித்தவர் என்பதால் உடனே புக் பண்ணியிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் மலையாள பெண்ணாக இருந்தபோதும் தமிழ் தெரிந்திருப்பது தனக்கு பெரிய ப்ளசாகியிருப்பதை உணர்ந்த ரேஸ்மிமேனன். இப்போது முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற கொள்கையை விட்டொழித்து விட்டு, தமிழ் தெரிந்த நடிகைகளை தேடும் இயக்குனர்களை விசாரித்து அவர்களிடம் சான்ஸ் கேட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.