ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆர்யா என்றாலே கோலிவுட்டின் ஜாலி பார்ட்டி நடிகர் என்றாகி விட்டது. தனக்கு சம்பந்தமே இல்லாத படங்களில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும தேடிப்பிடிதது சென்று நலம்குலம் விசாரித்து நட்பு வளர்ப்பார். சிலருக்கு தமிழ் தெரியாது என்றால், அதை பயன்படுத்தி அவர்களுக்கு தமிழ் ஆசான் ஆகிவிடுகிறார் இதை ஆர்யாவே சில மேடைகளில் கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஆர்யா தனது தம்பி சத்யாவுக்காக தற்போது அமரகாவியம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது, அண்ணனைப்பற்றி ரொம்ப உயர்வாக பேசினார் சத்யா. அதோடு, என் அண்ணன் ரொம்ப ஜெனூன் பெர்ஷன் என்றும் சொன்னார். அதைக்கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஆர்யா சற்று ஜர்க் அடித்தார்.
அதோடு, எதிரில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அந்த வார்த்தையைக்கேட்டு சலசலப்பு ஏற்பட்டது. இதனால் தன்னை கிண்டலடித்துதான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார் ஆர்யா. அதையடுத்து, நடிகைகளுடன் நட்பு வளர்க்கும் விசயத்தில் உங்கள் அண்ணனுக்கு போட்டியாக வருவீர்களா? என்று சத்யாவை நோக்கி கேள்வி பறந்தபோது, சினிமாவில் நல்ல நடிகனாக வேண்டும் என்றால் மற்றவர்களிடமுள்ள நல்ல விசயங்களை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் என் அண்ணிடமும் நிறைய நல்ல விசயங்கள் உள்ளது. அதனால் அதை நான் பின்பற்றுவேன் என்றார் சத்யா. சத்யாவின் பேச்சு நடிகைகள் விசயத்தில் ஆர்யா ரூட்டில் நான் கிராஸ் ஆக மாட்டேன் என்பது போன்று இருந்தது.