ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் ஷமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் அருவி, லிங்கனமக்கி அணை, தீர்த்தஹள்ளி மலை பகுதியில் பிரமாண்ட அணை செட் போட்டும் சிவன் சிலை அமைத்தும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசின் அனைத்து துறைகளிடமும் முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும் பகுதி படப்பிடிப்புக்கு புதிக பகுதிகள் அல்ல. இதற்கு முன்பே இங்கு தமிழ், கன்னடம், இந்தி படத்தின் படப்பிடிப்புகள் நடந்துள்ளது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.
எங்களால் யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. சுற்றுச்சூழல் பாதிக்கிற அளவுக்கு நாங்கள் எதையும் செய்வதுமில்லை. படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு அதை பார்க்கவும். ரஜினி சாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார். அவர்களை உள்ளே விட்டால் படப்பிடிப்பு பாதிக்கும் என்பதால் யாரையும் அனுமதிக்காமல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதனால் கோபமடையும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கையில் விரும்பத்தாகக சில செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதையே போராட்டம் என்கிறார்கள். எத்தகையை பிரச்னைகள் ஏற்பட்டாலும் அரசின் உதவியுடன் படபிடிப்பை வெற்றிகரமாக முடிப்போம். என்கிறார் தயாரிப்பாளர்.