ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அலிபாபா, கழுகு, வல்லினம் படங்களை அடுத்து கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே படம் அவருக்கு இரண்டாவது ஹிட்டாக அமைந்தது. அதனால் இப்போது வானவராயன் வல்லவராயன், யாட்சன், வன்மம், விழித்திரு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் பல படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகத்தான் நடிக்கிறார்.
இந்த நிலையில், யாட்சன் படத்தில் ஆர்யா, வன்மம் படத்தில் விஜயசேதுபதிக்கு தன்னை விட முக்கியத்துவம் கொடுத்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த கிருஷ்ணா, வானவராயன் வல்லவராயன் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ள விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்துக்கு தனக்கு இணையான வேடம் கொடுத்திருப்பதால் அதிருப்தியில் இருக்கிறாராம்.
முக்கியமாக, அவர் காமெடியாக கலாய்ப்பதிலும் வல்லவர் என்பதால் பல காட்சிகளில் கிருஷ்ணாவை விட கைதட்டல் வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறாராம். கிட்டத்தட்ட அடுத்த சிவகார்த்திகேயன் போல் தனது என்ட்ரி அமையவேண்டும் என்று ரிஸ்க் எடுத்திருககிறாராம் மா.கா.பா. இதனால் கிருஷ்ணாவை விட மா.கா.பாவின் காட்சிகளே படத்தில் களை கட்டுகிறதாம்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள கிருஷ்ணா, நான்தான் சீனியர், ஆனால் அவருக்கும் எனக்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டிருப்பதால் என்னைவிட அவருக்கே கதையில் முக்கியத்துவம இருப்பது போல தெரிகிறது என்று அவரது சில காட்சிகளுக்கு கத்தரி வைக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம். இதனால் இரண்டு கதாநாயகி நடிக்கும் படங்களில் ஏற்படும் ஈகோ பிரச்சினை இந்த படத்திலும் ஏற்பட்டுள்ளதாம்.