ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என்று தொடர்ந்து என்னுடைய படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்தாண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் தான் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் உருவாகும் என்று கமல் அப்போது வேதனை தெரிவித்தார். பிறகு ஒருவழியாக படம் ரிலீஸாகி ஹிட்டானது. தொடர்ந்து விஸ்வரூபம்-2 படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில், இந்தப்படத்திற்கும் எதிர்ப்பு வருமா என்று கமல் தரப்பிடம் கேட்டபோது, நிச்சயம் வராது, படத்தில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம் என்றார். அதேசமயம் தொடர்ந்து சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு கிளம்புகிறது என்று வேதனைப்பட்டார். தற்போது உத்தமவில்லன் படத்தில் நடித்து முடித்துள்ள கமல், உத்தமவில்லன் படம் வெளியானதும், விஸ்வரூபம்-2 வெளிவரும் என்று கூறினார்.