ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உலகம் முழுவதும் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா. பல்வேறு மொழிகளில் இசையமைத்து, ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளையராஜா, இப்போது அவரது ரசிகர் மன்றங்களை 'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை அழைத்துச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊராண பண்ணைபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு பள்ளியை ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்றார். அதை நிறைவேற்றி முடித்த பின்னர் மேலும் பல சமூக சேவை விஷயங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருடைய மனைவி ஜீவாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டிரஸ்ட் மூலம் பண்ணைபுரத்தில் பள்ளியைக் கட்ட ஆரம்பித்துள்ளார். சமூக சேவையில் முழுமையாக ஈடுபட வசதியாக நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ரசிகர் மன்றங்களை 'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' கீழ் இணைக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் இனி தனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்கு வழங்கப் போவதாகவும் இளையராஜா அறிவித்துள்ளார். ரசிகர்களும் ஒரிஜனல் சிடிக்களை வாங்க வேண்டும், சட்ட விரோதமாக கிடைக்கும் விஷயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' சமூக வலைத்தளங்களிலும் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது.