மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
கோலிவுட், நமீதாவை சுத்தமாக கைகழுவி விட்டது. இருப்பினும் அவர் கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறுவதாக இல்லை. குஜராத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் இப்போது தமிழச்சியாகி விட்டேன் என்று கூறியபடி, கடை திறப்பு விழா, நடன நிகழ்ச்சிகள் என்று தனது பொழுதை கழித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது மார்க்கெட் தள்ளாடிக்கொண்டிருப்பதால், பிந்து மாதவியும் நமீதாவுக்கு போட்டியாக கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு ரிப்பன் கட் பண்ணுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். காரணம் அவர் கடைசியாக நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் தோல்வியடைந்து விட்டதால் அடுத்தபடியாக ஏறுமுகத்தில் செல்லும் என எதிர்பார்த்திருந்த பிந்துவின் மார்க்கெட் இறங்கி விட்டது.
கைவசம், கலக்குறே மாப்ளே, வசந்தகுமாரன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்கள் இருந்தபோதும், படங்களின் மித வேகம் காரணமாக படப்பிடிப்பே இல்லாமல் அடிக்கடி ஆந்திராவுக்கு சென்று விடுகிறார் பிந்து மாதவி. மேலும், இந்த ஓய்வு நேரத்தில் ஏதாவது மீட்டர் ஓடிக்கொண்டிருந்தால்தானே நாலு காசு பார்க்க முடியும் என்று தனக்கு தெரிந்த சினிமா மேனேஜர்கள் அனைவரிடமும் இந்த விசயத்தை பாஸ் பண்ணியுள்ள அவர், நல்ல கமிசன் தருவதாகவும் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, நமீதாவை விட 10 மடங்கு ஜாஸ்தியாக தருவதாக உறுதி அளித்துள்ளாராம். இதனால், நமீதாவை கடை திறப்பு விழாக்களுக்கு புக் பண்ணி வந்த மேனேஜர்கள்கூட இப்போது பிந்து மாதவியின் கட்சிக்கு தாவி விட்டனர். திடுதிப்பென்று தனது கல்லாவை பிந்து மாதவி காலி பண்ணி விட்டதால செம கடுப்பில் இருக்கிறார் நமீதா.