ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் அதையடுத்து தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறார். அந்தவகையில், காதலில் சொதப்புவது எப்படி ஓரளவு ஹிட்டடித்து அவருக்கு நம்பிக்கை கொடுத்ததால் அதையடுத்து தெலுங்கைகூட ஓரங்கட்டிவிட்டு முழுநேர தமிழ் நடிகராகியிருக்கிறார்.
அந்த வகையில், உதயம் என்எச்-4, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களில் நடித்தவர் அதையடுத்து, வசந்த பாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படத்தில் நடித்திருப்பவர், பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்திலும் நடித்து விட்டு அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முதலாக அதிரடி ஆக்சன் ஹீரோவாக இறங்கியிருக்கும் சித்தார்த், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சமீபத்தில்தான் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே, தன்னிடம் கதை சொல்லியிருக்கும் சில இயக்குனர்களையும் வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் சித்தார்த். காரணம், ஜிகர்தண்டா வெளியான பிறகுதான் உங்களது கதைகளில் நடிப்பதா? வேண்டாமா? என்ற முடிவையே என்னால் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறாராம். இப்படி சித்தார்த் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா, இம்மாதம் 27ந்தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆக இதன்பிறகு தான் சித்தார்த்தின் ரூட் இனி ஆக்சனா? இல்லை மீண்டும் ரொமான்சா? என்பது தெரியவருமாம்.