ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த 12-ந்தேதி டைரக்டர் விஜய்-நடிகை அமலாபால் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து, தான் தயாரித்து இயக்கியுள்ள சைவம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடைபெற்றதால், தேனிலவுக்கு செல்வதை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருந்த அவர்கள், இந்த வார தொடக்கத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் கொண்டாட புறப்பட்டனர்.
அங்குள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தேனிலவை ஜாலியாக கொண்டாடும் அவர்கள், பிடித்தமான பகுதிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று சுற்றிப்பார்த்து தேனிலவை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி செல்லும்போது, எடுக்கும் போட்டோக்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தார் அமலாபால்.
ஆனால், அதைப்பார்த்த அவரது சினிமா உலக நண்பர்களும், உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினர். ஆனால, சில ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களைப்பார்த்து அசிங்கமான கமெண்ட்ஸ் கொடுத்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால், தான் பேஸ்புக்கில் வெளியிட்டிருநத அனைத்து ஹனிமூன் போட்டோக்களையும் உடனடியாக பேஸ்புக் தளத்தில் இருந்தே நீக்கி விட்டார்.
அதோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும். ஆனால், மனசு புண்படும் வகையில் கமெண்ட் கொடுத்து விட்டீர்களே என்றும் தனது வேதனையை தெரிவித்துள்ளார் அமலாபால்.