ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணா நகர் முதல் தெரு, உள்பட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொடுக்காபுளி செல்வராஜ். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் கொடுக்காபுளி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றதால் கொடுக்காபுளி செல்வராஜ் என்றே அழைக்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் துணை நடிகர்கள் ஏஜெண்டாக பணியாற்றினார். பின்னர் துணை நடிகர் ஏஜெண்டுகள் சங்கத் தலைவரானார்.
58 வயதான செல்வராஜ் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை (ஜூன் 12) அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி மரியாதைகள் செய்யப்பட்டது. செல்வராஜுக்கு குழந்தைகள் இல்லை. ராஜகுமாரி என்ற மனைவி மட்டும் உள்ளார்.