ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூர்யா தற்போது நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது. மும்பை, ஐதராபாத், சென்னை என தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்புக்கு தற்போது சின்ன பிரேக். இந்த இடைவெளியில் ஏர்செல் விளம்பரப்படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் இந்த விளம்பரப்படத்தில் சூர்யா நடித்து முடித்த பிறகு மீண்டும் அஞ்சான் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மும்பையில் ஏற்கனவே படப்பிடிப்பு நடைபெற்ற ஏரியாக்களிலேயே மீண்டும் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். அஞ்சான் படத்தில் ராஜூ பாய் என்ற வேடத்தில் நடிக்கிறார் சூர்யா. மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் மிகப்பெரிய தாதாவாக விளங்கும் ராஜூ பாயை அப்பகுதி மக்கள், அந்தேரி புலி என்று அழைக்கின்றனராம். இதை உறுதிப்படுத்துவதுபோலவே அஞ்சான் படத்தில் சூர்யாவின் அறிமுகப்பாடலில் அந்தேரி புலி என்ற வாசகங்களுடன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. நாயகன் படத்தில் கமல் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் வரது பாய். அஞ்சான் படத்திலோ சூர்யாவின் வேடமோ..ராஜூ பாய்.
என்னமோ ஒற்றுமை தெரியுதே...