ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சேலத்தைச் சேர்ந்த பி.நிஷா என்ற பெண் 7 வருடம் கடுமையாக உழைத்து 0 2 9 (சீரோ டூ நையன்) என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். அவரே தயாரிப்பாளர், இயக்குனர், இதுபற்றி அவர் கூறியதாவது: அனிமேஷன் படித்திருக்கிறேன். வெளிநாட்டில் உருவாகும் அனிமேஷன் படங்களை சினிமாவிலும், டி.வியிலும் பார்த்து விட்டு நாம் ஏன் அப்படி உருவாக்ககூடாது என்று அது தொடர்பாக நிறைய படித்தேன். பொம்மை, விலங்குகள், மனிதர்கள்தான் அனிமேஷன் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாம ஏன் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து ஒரு கதைய உருவாக்க கூடாது என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடாக சீரோ முதல் 9 வரையிலான எண்களுக்கு உயிர் கொடுத்து நடிக்க வைத்தேன்.
இந்த பத்து நம்பர்களும் ஒரு புதையலைத் தேடி செல்கின்றன. அப்போது அவர்களுக்குள் வரும் மோதல், ஈகோ, துரோகம், காதல்தான் கதை. கடைசியில் மனிதனுக்கு ஈகோ இருக்க கூடாது. ஈகோ இல்லாவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற மெசோஜோடு படத்தை முடிக்கிறேன். சுமார் 6 வருடங்களாக 150 கம்ப்பயூட்டர் நிபுணர்களுடன் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறேன். இதனை வெளியிட முதலில் தயக்கம் இருந்தது. தற்போது கோச்சடையான் படத்துக்கு மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்ததும் வெளியிடும் தைரியம் வந்து விட்டது. தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் டப் செய்ய இருக்கிறோம். என்கிறார் நிஷா.