சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ஆந்திரத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆரம்பத்தில் சமூக சேவையில் இருந்தார். மிகப்பெரிய ரத்த வங்கியை ஆரம்பித்து நடத்தினார். திடீரென்று அவருக்கு அரசியல் ஆசை வந்தது. பிரஜா ராஜயம் (மக்கள் அரசாங்கம்) என்ற கட்சியை பிரமாண்டமாக துவக்கினார். அடுத்த ஆந்திர முதல்வர் அவர்தான் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. கட்சி தொடங்கியவுடன் வந்த சட்டமன்ற தேர்திலில் பிரஜா ராஜ்யம் பெரிய வெற்றியை பெறவில்லை. சிரஞ்சீவியை மக்கள் சினிமாவில் ரசித்த அளவிற்கு அரசியலில் ரசிக்க வில்லை. இதனால் கட்சி கரைய ஆரம்பித்ததும் அதனை காங்கிரஸ் கட்சியில் இணைத்துவிட்டு மத்திய அமைச்சரானார்.
அதற்கெடுத்து வந்த தனி தெலுங்கானா பிரச்சினையில் சிரஞ்சீவி உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. அவருக்கு பக்க துணையாக இருந்த அவரது தம்பி பவன் கல்யாண் பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்தார். சிரஞ்சீவியின் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இப்படியாக சிரஞ்சீவியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
தற்போது அரசியலில் இருந்து சற்று விலகி இருந்து மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்திருக்கிறார். இனி நடிக்கப்போகும் படம் 150 வது படம் என்பதால் அது பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும், கண்டிப்பாக வெற்றி பெறவும் வேண்டும் என்று கருதுகிறார். இதனால் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களிடம் தனக்காக கதை தயார் செய்ய சொன்னார். அவர்கள் அனைவரும் தற்போது பிசியாக இருப்பதால் தானே ஒரு கதையை தேர்வு செய்துவிட்டார்.
தமிழ்நாட்டில் பொன்னர் சங்கர், புலித்தேவன், கட்டபொம்மன் போன்று 1840ம் ஆண்டுகளில் வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த உய்யடவாலா நரசிம்மரெட்டி என்பவரின் வரலாற்று கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதனை அவரது மகன் ராம்சரண்தேஜா தயாரிக்கிறார். அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.