ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பென்சில் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆரம்பத்தில் முதல் படத்தின் வெற்றியை பொறுத்துதான் மீண்டும் கதாநாயகனாக நடிப்பேனா? இல்லையா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நினைத்தாரோ, அந்த படம் ரிலீசாவதற்கு முன்பே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
முந்தைய படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடித்திருப்பதால் தனது உடல் எடையை குறைத்து சின்ன பையனாட்டம் மாறிய ஜி.வி.பிரகாஷ், புதிய படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகராக நடிக்கிறாராம். அதனால் முதல் படத்தை விட தனது உடல் எடையை ஓரளவு அதிகப்படுத்தி நடிக்கும் அவர், படம் முழுக்க எம்.ஜி.ஆரின் உருவம் பதித்த டீசர்ட் அணிந்து நடித்திருப்பதோடு, சில காட்சிகளில் எம்.ஜி.ஆர் பாடல்களின் பின்னணியில்தான் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேலும், முதல் படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமாரை இந்த படத்தில் முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேருமாறு சிலர் கேட்டு கொண்டார்களாம். அதற்கு, நான் பார்க்க ரொம்ப சின்ன பையன் மாதிரியே இருக்கிறேன். அதனால் முன்னணி நடிகைகளை எனக்கு ஜோடியாக்கினால் அவர்களுக்கு தம்பி மாதிரி இருப்பேன் எனறு சொல்லி இப்படத்தில் பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்துள்ள ஆனந்தியை தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். அதேபோல் இன்னொரு ஹீரோயினியாக ஸ்ருஷ்டி என்ற புதுமுகமும் இப்படத்தில் நடிக்கிறாராம்.
ஆக, த்ரிஷாவாக ஆனந்தியும், நயன்தாராவாக ஸ்ருஷ்டியும் நடிப்பதாக தெரிகிறது.