ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்-நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு நயன்தாராவை அழைத்தார். ஆனால், அவர் அப்போது நடிக்கிற மூடில் இல்லை என்று சொன்னதை அடுத்து ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தார். அப்படமும் ஹிட்டானது. அதனால் பின்னர் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர் இப்போது நண்பேன்டா படத்திலும் அவருடன் நடித்து வருகிறார்.
ஆனால் இதையடுத்து அவர் நடிக்கும் படத்தில் லட்சுமிமேனன் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், அவருக்கு பெரிய பிஸ்னஸ் வேல்யூ இல்லாததால், முன்னணி நடிகையாக தேடி வந்த உதயநிதி. இப்போது சமந்தாவிடம் பேசியிருக்கிறார். தற்போது விஜய், சூர்யா, விக்ரமுடன் நடித்து வரும் சமந்தா, உதயநிதி சிறிய ஹீரோ என்றபோதும், தனக்கான கேரக்டரும், கரன்சியும் வெயிட்டாக இருந்ததால் மறுபேச்சின்றி நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.