ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிம்புவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து, அவரைக்கண்டாலே முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு திரிந்தார் ஹன்சிகா. அவர் ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், அந்த விழாவை எத்தனை நெருக்கமானவர்கள் நடத்தினாலும் சிம்பு வந்தால் நான் வரமாட்டேன் என்று நெத்தியடியாக மறுத்து வந்தார் ஹன்சிகா.
அதனால், பின்னர் வாலு படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று அவரை கேட்டபோது, நானாவது சிம்புவுடன் இனி நடிப்பதாவது என்று டேக்கா கொடுத்தார். இதனால் பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு சென்றார் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி. அதையடுத்து நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரண்டு மனதாக பாடல் காட்சியில் நடித்துத்தர சம்மதித்தார் ஹன்சிகா.
அதனால், அவர் மனசு மாறுவதற்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டுமென்று தனது இது நம்ம ஆளு படத்தைகூட கிடப்பில் போட்டு விட்டு வாலு இறுதிகட்ட வேலைகளில் இறங்கினார் சிம்பு. ஹன்சிகா கொடுத்த கால்சீட்டை உடனடியாக பயன்படுத்திக்கொளள் பெங்களூரில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். ஆனால், இன்னொரு பாடலை அவர்களால் உடனடியாக படமாக்க முடியவில்லை.
அதனால் சில வாரங்கள் கழித்து அந்த பாடலை பாங்காக்கில படமாக்க ஹன்சிகாவை அழைத்தபோது, உங்களுக்கு இதே வேலையாப்போச்சு என்று கடுப்பாகினார். இருப்பினும் மீண்டும் அவரை பேசி சரிகட்டி இப்போது பாங்காக் செல்ல தயாராகி விட்டனர். விரைவில் சிம்புவுடன் பாங்காக் பறக்கிறார் ஹன்சிகா. இந்த பாடலோடு வாலு டீமுக்கும், சிம்புக்கும் சேர்த்து மொத்தமாக குட்பை சொல்லப்போகிறாராம் ஹன்சிகா.