ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9-ந்தேதியே வெளிவர வேண்டிய கோச்சடையான் வருகிற 23-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள். இந்த தொகையை வங்கிக்கு செலுத்தினால் மட்டும் அப்படத்தை வெளியிட முடியும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் கண்விழி பிதுங்கி நிற்கிறது கோச்சடையான் யூனிட்.
இந்த நிலையில், அப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கும் பல கோடிகள் கொடுக்க வேண்டியுள்ளதாம். ரஜினி படம் என்பதால் ஹாலிவுட்டில் முகாமிட்டிருந்தபடியே இசைப்பணிகளை முடித்து விட்ட ஏ.ஆர்.ரகுமான், தனது கையில் இருந்து பணத்தை போட்டு இசைப்பணிகளை செய்திருக்கிறாராம். அதனால் அவருக்கும் ஒரு தொகை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்கிற இன்னொரு இக்கட்டான சூழ்நிலையும் கோச்சடையானுக்கு இருந்து வந்தது.
ஆனால், இது சம்பந்தமாக கோச்சடையான் டைரக்டர் சவுந்தர்யா ரஜினி, ஏ.ஆர்.ரகுமானை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது தேவையானால் மொத்த சவுண்ட் ட்ராக்கையும் தருகிறேன் முதலில் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள். எனக்கு தர வேண்டிய தொகையை பின்னர் கொடுத்து விடுங்கள் என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டாராம்.
ஆக, வங்கி பிரச்னை மட்டும் தீர்ந்து விட்டால், வருகிற 23-ந்தேதி கோச்சடையான் ரிலீசாவது உறுதியாகி விடும் என்று தெரிகிறது.