ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடி ஒரே பாட்டில் உலகம் முழுக்க பிரபலமானவர் கானா உலகநாதன். அதையடுத்து அவரது குரலை சினிமாவில் கேட்க முடியவில்லை. ஆனால், அவரது வரவுக்குப்பிறகு பட்டி தொட்டிகளில் பாடிக்கொண்டிருந்த கிராமிய பாடகர், பாடகிகள் அனைவரும் கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர்.
அதன்காரணமாக, நாக்குமுக்க பாடிய சின்னப்பொண்ணு, வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்ற பாடிய வேல்முருகன், அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி பாடலை பாடிய கானா பாலா உள்ளிட்ட பலர் தற்போது தொடர்ந்து சினிமாவில் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் கானா பாலா, அட்டகத்தியில் இரண்டு பாடல்களை பாடி பிரபலமானவர், அதையடுத்து, காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமும் ஆடியிருந்தார்.
அதையடுத்து இப்போது பல படங்களில் தானே பாட்டெழுதி, பாடி, நடனமாடவும் தொடங்கியிருக்கிறார். ஆனால், முன்பெல்லாம் ஒரு பாடல் பாடுவதற்கு நாற்பது ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். இப்போதோ, ஒரு லட்சம் கொடுங்கள். நானே பாடுவதோடு, நடனமாடியும் விடுகிறேன் என்கிறாராம். கானா பாலாவின் இந்த திடீர் கெடுபிடியினால் சில இயக்குனர்கள் அவரை தவிர்த்து வருகின்றனர். மாறாக, வேல்முருகன் உள்ளிட்ட சில கிராமிய பாடகர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.