ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் நடிகராக அறிமுகமான அர்ஜூன், ஒரு கட்டத்தில் தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் இயக்குனராகவும் உருவெடுத்தார். அந்த வகையில், சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி உள்பட பல படங்களை இயக்கி வெற்றியும் கண்டார். அதனால்தான் தற்போது தனது மார்க்கெட் வீழ்ந்து கிடப்பதால் அதை தூக்கி நிறுத்தும் முயற்சியாக தானே தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என்று மூன்று முகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார் அர்ஜூன்.
இந்த நிலையில, விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில், தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக அறிமுகம் செய்தார் அர்ஜூன். ஆனால் அந்த படத்தின் தோல்வியால் அதன்பிறகு ஐஸ்வர்யாவுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதையடுத்து படிப்பை விட்ட இடத்தில் இருந்து தொடருவதற்காக வெளிநாடு சென்று விட்டார் ஐஸ்வர்யா.
இருப்பினும், மகளின் சினிமா கனவை நனவாக்கும் வகையில், மீண்டும் அவரை தனது சொந்த பேனரில் தனது இயக்கத்திலேயே நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார் அர்ஜூன். அதனால், அதற்கான கதையையும இப்போதே ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம். படிப்பு முடிந்து ஐஸ்வர்யா திரும்பியதும், அவருக்கு மீண்டும் அரிதாரம் பூசி, அவரை சினிமாவில் வெற்றிப்பட நாயகியாக்கும் வரை ஓயமாட்டாராம் அர்ஜூன்.