சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. அவர் படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரி குவித்தது. அதோடு, ரஜினியிடத்தில் நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்று கேட்டால், அதில் முதல் படமாக பாட்ஷாவைத்தான் சொல்வார். அந்த அளவுக்கு அவருக்கும் இது அதிகம் பிடித்த படங்களில் ஒன்று.
அப்படிப்பட்ட பாட்ஷா படத்தை தழுவிய கதையில்தான் இப்போது சூர்யாவின் அஞ்சான் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மும்பையை மையமாகக்கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பாட்ஷாவில் ரஜினி பேசிய, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற பஞ்ச் டயலாக்கைப்போன்று அஞ்சான் படத்தில் சூர்யாவும் ஒரு டயலாக்கை அடிக்கடி பேசுகிறாராம். அந்த டயலாக் என்னவெனில், நான் சாகுறதா இருந்தாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும், அதேசமயம் நீ சாகுறதா இருந்தாலும் அதையும் நான்தான் முடிவு பண்ணனும் என்பாராம். இந்த டயலாக் படத்தில் பல இடங்களில் இடம்பெறுகிறதாம்.