ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெனாலிராமன் மிகப்பெரிய வெற்றியடையும், உடனே தான் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்ற திட்டத்தில் இருந்தார் வடிவேலு. அதற்கு ஏற்றார்போல் சிலரிடம் கதை கேட்டு வந்த வடிவேலு, ஒன்றிரண்டு கதைகளில் திருப்தியடைந்து, அவற்றில் சில மாற்றங்களையும் சொல்லி, கதையை மெருகேற்றும்படி கூறி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தெனாலிராமன் படத்தின் ரிசல்ட் அவரது திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டது. தெனாலிராமன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது மட்டுமல்ல, மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது, எனவே வடிவேலுவின் திட்டம் நிறைவேறாமல்போனது ஒரு பக்கம் இருக்க, அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களையும் பின்வாங்கச் செய்துவிட்டது.
இன்னொரு பக்கம் தெனாலிராமன் தோல்வி தொடர்பாக வடிவேலுவுக்கும், அப்படத்தின் இயக்குநர் யுவராஜுக்கும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கிறதாம். கதை,காட்சிகள், வசனம் என எல்லாவற்றிலும் வடிவேலு தலையிட்டதே தெனாலிராமன் படத்தின் தோலில்விக்குக்காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம் யுவராஜ். இந்த விஷயத்தை யாரோ வடிவேலுவின் காதில் ஓதிவிட்டனர். எனவே யுவராஜ் பேரைச் சொன்னாலே பல்லைக்கடிக்கிறாராம் வடிவேலு.