ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேடி படம் தொடங்கி வீரம் வரை தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. ஆனாலும் தமன்னாவுக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறதாம். தமன்னாவுக்கு புதிராக இருப்பது என்ன விஷயம் தெரியுமா? தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டு படு பிஸியாக இருந்த தனக்கு திடீரென படமில்லாமல்போனது ஏன்? என்பதுதான் தமன்னாவுக்கு புரியாத புதிர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்களில் சுறா, தில்லாலங்கடி, வேங்கை ஆகிய ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே தோல்விப்படங்கள்! மற்ற படங்கள் எல்லாமே வெற்றிப்படங்கள்தான். அப்படி இருந்தும் தன் கேரியர்கிராஃப் சரிய என்ன காரணம் என்று தெரியாமல் முழிக்கிறார் தமன்னா. கடைசியாய் அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆனார் தமன்னா. வீரம் படத்தின் வெற்றியை வைத்து, இந்தமுறை தமிழில் முழுமையாய் கவனம் செலுத்துவது என்றும், மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது என்றும் கனவு கண்டார். அய்யோ..பாவம்! இந்தமுறையும் தமன்னாவின் எண்ணம் ஈடேறவில்லை.
வடை போச்சே..!