ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்சினிமாவில் கதாநாயகிகளுக்குத்தான் பஞ்சம் என்று சொல்வார்கள். கடந்த சில வருடங்களாக கதாநாயகன்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது முன்னணி கதாநாயகர்கள் அனைவரும், ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதாலும், கதாநாயகன்களில் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்டதாலும் பல தயாரிப்பாளர்களால் அவர்கள் நினைத்தபடி படங்கள் எடுக்க முடியவில்லை.
புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் படம் பிசினஸ் ஆகாது என்பதால், சினிமாவிலேயே மற்ற துறைகளில் பிரபல முகங்களாக இருப்பவர்களை ஹீரோவாக்கினால் என்ன என்று யோசிக்கிறார்கள். இதனடிப்படையில்தான் இசையமைப்பாளர் அனிருத்தையும் கதாநாயகனாக்க சிலர் முயற்சி செய்திருக்கின்றனர். ஆக்கோ என்கிற ஆர்வக்கோளாறு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு முதலில் தேடி வந்தது இசையமைப்பாளர் அனிருத்தைத்தான்.
அந்தப் பட வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது, எனக்கு நடிப்பதில் விருப்பமில்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டார். அதோடு, டைம்பாஸுக்காக அந்தப் படத்தின் கதையைக் கேட்டிருக்கிறார் அனிருத். கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக, தானே முன்வந்து ஆக்கோ படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம் அனிருத். அந்த நன்றிக்கடனுக்காகவோ என்னவோ அனிருத்தை ஹீரோ ரேன்ஜக்கு அநியாயத்துக்கு பில்ட் அப் பண்ணி ஆக்கோ படத்திற்கு பப்ளிசிட்டி செய்கின்றனர்.