ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னிந்திய சினிமாவின் மூத்த அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நேற்று (ஏப்ரல் 27) தேர்தல் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை, சேம்பர் அவமதிப்பதாகவும், சேம்பரில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி இந்த முறை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலை புறக்கணித்தது. 2088 வாக்குகளை கொண்ட சேம்பரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வாக்கு 837. தயாரிப்பாளர் சங்கத்தின் புறக்கணிப்பால் சேம்பரின் முன்னாள் தலைவர் கல்யாணின் ஆதரவோடு நின்றவர்கள் எளிதாக வெற்றி பெற்றார்கள். 1140 பேர் நேற்று வாக்களித்தனர். பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தலைவராக கேரளாவைச் சேர்ந்த சசிகுமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செவன்த் ஸ்டார் விஜயகுமார் தோல்வி அடைந்தார். செயலாளர்களாக அருள்பதி, காட்ரகட்ட பிரசாத், ஆகியோரும் பொருளாளராக கே.முரளிதரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று (ஏப்ரல் 28) கமிட்டி உறுப்பினர்களுக்கான ஓட்டுகள் எண்ணப்படுகிறது. மாலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.