ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கே.எஸ்.ரவிக்குமார் போன்ற முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடித்து வந்த கமல், விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தானும் ஒரு பிரமாண்ட இயக்குனராக உருவெடுத்து நிற்கிறார். அதனால், இனி கமலை மற்ற இயக்குனர்கள் நெருங்க முடியாதோ என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், விஸ்வரூபம்-2 படத்தை முடித்த கையோடு கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்தவர், அடுத்து த்ரிஷ்யம் படத்திலும் நடிக்கிறார். அதனால் இப்போது மற்ற இயக்குனர்களும் கமலை நெருங்கத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை தெலுங்கு கேமராமேன் தேஜா என்பவர் இயக்குகிறாராம். ஏற்கனவே தெலுங்கில் சித்ரம், நுவ்வு நேனா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள அவர், சமீபத்தில் கமலை சந்தித்து தன்னிடமிருந்த சில கதைகளை சொன்னாராம். அதில் ஒரு கதையில் தான் நடிப்பதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம் கமல். முந்தைய படங்களை தெலுங்கில் மட்டுமே இயக்கிய தேஜா, கமல் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கிறாராம்.
ஆக, இந்த ஆண்டிலேயே உத்தமவில்லன், த்ரிஷ்யம் படங்களை முடித்து விட வேண்டும் என்று தலா 3 மாதம் வீதம் கால்சீட்டை பிரித்துக்கொடுத்துள்ள கமல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேஜா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.