ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
1100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் ராஜ ராஜ சோழனின் போர்வாளை மையமாகக் கொண்டு உருவாகும் படம்தான் ராஜராஜ சோழனின் போர்வாள். இப்படத்தில் பாடலாசிரியர் சினேகன் நாயகனாக நடிக்கிறார். சரித்திர கால காட்சிகள் அப்படத்தில் ஒரு 25 நிமிடம்தான் வருகிறது என்றாலும். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்களாம்.
அதிலும், போர்வாள்தான் படத்தின் மையம் என்பதால், அதுபற்றி ரொம்ப விவரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த வாள் பற்றிய தகவல்களை தஞ்சை பகுதியில் விசாரித்தபோது யாருக்குமே தெரியவில்லையாம். கடைசியாக, கல்வெட்டுகளில் அந்த வாள் பற்றிய செய்தியை கண்டு பிடித்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஊருக்கு சென்று தகவலை சேகரித்தார்களாம்.
இதுபற்றி சினேகன் கூறுகையில், ராஜராஜ சோழன் தனது காலத்தில், போர் வாள்களை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையாளூர் என்ற ஊரில் உள்ள பட்டறைகளில்தான் செய்து வந்திருக்கிறார்கள். 14 கிலோ எடையுள்ள அந்த வாள்களின் உயரம் 4.5 அடியாம். அத்தனை பெரிய வாளை தூக்கி அந்த காலத்து வீரர்கள் சண்டை செய்திருக்கிறார்கள். அதனால் போர் வாள் பற்றி சொல்லும்போது அது செய்யப்பட்ட அந்தந்த பகுதிகளிலேயே படமாக்கப்போவதாக சொல்லும் சினேகன், இந்த காலத்து மக்களுக்கு இது அரிய தகவலாக இருக்கும் என்கிறார்.