ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள சுமார் 1500 தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதனும், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வமும் அணைத்து தியேட்டர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பி இருந்தார்கள். அதை தொடர்ந்து இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.