சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ராம், நடித்து, இயக்கி, வெளிவந்து அனைவரின் பாராட்டை பெற்று, பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்து வரும் தங்கமீன்களுக்கு, இந்தாண்டு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற மகிழ்ச்சி பற்றி தினமலருக்கு ராம் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
தங்க மீன்கள் படத்தின் கதை எழுத காரணமாக இருந்தவர் என் மகள் ஸ்ரீ சங்கர கோமதி, கோவையில் 4 ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கும், இந்த படத்தை போகுமா போகதா என்று, எந்த பிரதிபலனும் இல்லாமல் வெளியிட்ட தயாரிப்பாளர் சதீஷ் அவர்களுக்கும் நன்றியை சொல்ல விரும்புறேன். இந்த விருது கிடைத்த அனுபவம் எளிமையாக படம் எடுப்பது கஷ்டம் என்பதை எனக்கு உணர்த்தியது. உண்மைக்கு பக்கத்தில் இருந்து ஒரு படைப்பை சொல்லும்போது அது தோற்காது என்று தெரிந்தது. இந்த விருதை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு சமர்பிக்கிறேன். அவர்தான் இந்த படத்தை தேசிய விருதுக்கு தேர்வு செய்ய அனுப்பி வைக்க என்னை வற்புறுத்தினார். அவர் இப்போது
இல்லாதது எனக்கு பெரும் வருத்தமாக இருக்கிறது. இனி நான் பெற போகும் அனைத்து பேர், புகழ், விருது எல்லாமே பாலுமகேந்திரா சாருக்கு போய் சேரும் என்று
தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றி என்றார்.
இதேப்போல் வல்லினம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் அளித்த சிறப்பு பேட்டியில், ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமானேன், வல்லினம் எனக்கு மூன்றாவது படம். ஆண்டனி, சதீஷ் ஹர்ஷா போன்ற எடிட்டர்களிடம் வேலை கற்றேன். ஈரம் படத்தின் டிரைலரை நான் தான் வடிவமைத்தேன். அது அப்போது பரவலாக பேசப்பட்டது. அப்போது இருந்தே இயக்குனர் அறிவுடன் நல்ல நட்பு இருந்தது. வல்லினம் கதை ரெடி பண்ணி உடனே என்னையும் தமனையும் தான் முதலில் ஒப்பந்தம் செய்தார். என் வேலை மீது நம்பிக்கை வைத்து கொடுத்த வாய்ப்பிற்கு இயகுநருக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீ தேசிய விருது பெற்றது எனக்கு கிடைத்த விருது மாதிரி மகிழ்ச்சியில் இருக்கேன் என்றார். வல்லினம் படத்துக்கு எதாச்சும் விருது கண்ணடிப்பாக கிடைக்கும் என்று மொத்த டீமும் எதிர்பார்த்தோம், கடினமாக உழைத்தோம். தேசிய விருது எனக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லார்க்கும் என் நன்றி! என்றார்.