மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நட்சத்திரம் சித்தார்த். டுவிட்டரில் அவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள். இதுபற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது: நான் சுறுசுறுப்பானவன் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருக்கிறவன். சமூக வலைத்தளங்களை ஒரு ஆக்டிவான மீடியாவாக பார்க்கிறேன். உலகத்துல நடக்குற எல்லா விஷயம் பற்றியும் எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கும். சிலர் வெளிப்படையாக சொல்வாங்க. சிலர் சொல்றதில்ல. நான் சொல்ற வகை. எல்லாத்துக்கும் கருத்து சொல்றதை பார்த்துட்டு என் பிரண்டுங்க என்னை ஓபீனியன் ஸ்டார்னு கிண்டல் பண்றாங்க. நான் அதை பாசிட்டிவாத்தான் எடுத்துக்குறேன். நாம சொல்றது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது.
இப்போ நான் சொல்றது பத்து லட்சம் பேருக்கு பிடிக்குது. நான் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்னா அடுத்த நிமிடமே அதை பத்து லட்சம் பேருக்கு சொல்ல முடியும். அடிக்கடி மீடியாவை கூப்பிட்டு எதுக்கு அவுங்க நேரத்தை வீணடிக்க வேண்டும். என்னை பற்றி வருகிற கிசுகிசுக்களுக்கும் பதில் சொல்லிடுறேன். நிறைய ஹீரோயின்களோடு நடிக்கிறதால கல்யாணம் வரைக்கும் கிசுகிசு வந்துகிட்டுதான் இருக்கும். அம்மா அப்பா முடிவு பண்ணின பிறகு கல்யாயணம் அதையும் டுவிட்டர்லேயே சொல்லிடுறேன் என்கிறார் சித்தார்த்.