ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி. அந்த வரிசையில் அருள்நிதியும் சேர்ந்துவிட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் காமெடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா என்ற புதுமுகம் படத்தை இயக்குகிறார்.
ஒரு கிராமத்தில் உள்ள எல்லோரும் நல்லவரே. அந்த கிராமத்தில் எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஒரு குற்றமும் நடந்ததில்லை. முதன் முறையாக அந்த ஊருக்குள் போலீஸ் நுழைகிறார்கள். அதன் பிறகு அந்த கிராமத்தில் எல்லாமே நடக்க ஆரம்பித்து விடுகிறது. அது எப்படி என்பதுதான் கதை. "படத்தோட தலைப்பையும், கதையையும் பார்த்துவிட்டு ஏதோ போலீசை தாக்குற சீரியசான படம்னு நினைக்காதீங்க. இது காமெடி எண்டர்டெயின்மெண்ட் படம்" என்கிறார் இயக்குனர் கிருஷ்ணா. சிங்கம்புலி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் பகவதி பெருமாள், ராஜ்குமார் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்த வருகிறது.