ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபகாலமாக தனது மனதில் பட்ட கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து பெரிய கருத்து கந்தசாமியாகி வருகிறார் சமந்தா. பாராளுமன்ற தேர்தல் தொடங்கியபோது சமந்தா அரசியலுக்கு வருகிறார். அவரது தந்தை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று வந்த செய்திகளையெல்லாம் வதந்தி என்று உடனடியாக பதில் கொடுத்து சர்ச்சைகளை ஊதி தள்ளினார் சமந்தா.
இதனால் அவருக்கு மனதளவில் சுத்தமாக அரசியல் ஆசை இல்லை என்பதை வெளிப்படுத்தினார். அதேசமயம், ஒரு சராசரி குடிமகளாக தனது கருத்துக்களை அவர் சொல்வதை நிறுத்தவில்லை. நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதோடு, தங்களது ஓட்டுக்களை வீணடிக்காமல் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இதுவரை தனக்கு பிடித்த தலைவர் பற்றி வெளிப்படையாக சொல்லாமல் இருந்த சமந்தா, இப்போது நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவர் நல்ல திறமையான தலைவர் என்று தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த வெளிப்படையான பேச்சு பலருக்கு ஆச்சர்யத்தையும், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளையும ஏற்படுத்தியுள்ளது.