ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மாதவன்-ஆர்யா நடித்த வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கி வரும் படம் அஞ்சான். சூர்யா நாயகனாக நடித்து வரும் இப்படத்தில சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகளை படமாக்கி வந்த லிங்குசாமி, இப்போது சூர்யா-சமந்தா இடம்பெறும் டூயட் பாடல்களை படமாக்கிக்கொண்டிருக்கிறாராம். அந்த பாடலுக்கு பிரபுதேவாவின் அண்ணனான ராஜூசுந்தரம நடனம் அமைத்து வருகிறாராம். அந்த பாடலில் 100க்கணக்கான நடன கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்களாம்.
ஆனால், வெளிமாநில படப்பிடிப்புகள் நடைபெறும்போது, அந்த மாநிலத்தில் இருந்தும் 30 சதவீதம் நடன கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்றொரு சினிமா சட்டம் இருக்கிறது. ஆனால் ராஜூசுந்தரமோ, மொத்த நடன கலைஞர்களையும் சென்னையில் இருந்தே கூட்டிச்சென்று விட்டாராம். இதனால், இந்தி சினிமா சங்கத்தைச்சேர்ந்தவர்கள், அஞ்சான் ஸ்பாட்டுக்கு சென்று 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டார்களாம். வேறு வழியில்லாமல் அந்த தொகையை படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமியே என்பதால், அவரே கட்டியிருக்கிறார்.
ஆனால், அந்த பிரச்னைக்கு காரணமே ராஜூசுந்தரம்தான் என்பதால், அவரது சம்பளத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து விட்டாராம் லிங்குசாமி. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூசுந்தரம், தான் செய்தது தவறு என்றபோதும், லிங்குசாமி மீது சென்னை நடனக்கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அதையடுத்து, பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.