ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஷங்கரின் சிஷ்யர் அட்லீ டைரக்ட் செய்த படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யன் என ஒரு நட்டசத்திர பட்டாளமே நடித்த படம். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
காதலில் தோற்ற ஆர்யாவும், நயன்தாராவும் கட்டாய கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பிரிய திட்டம்போட அப்புறம் புரிந்து கொண்டு சேர்கிற மாதிரியான கதையில் காமெடியையும், ரொமான்சையும் கச்சிதமாக சேர்த்து ஹிட்டடிக்க வைத்தார் அட்லி.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி ரிலீசான ராஜாராணிக்கு இன்று 100 வது பிறந்த நாள்.
ராஜாவும் ராணியும் சத்யம், எஸ்கேப், பிவிஆர் மால்களில்தான் பிறந்த நாளை கொண்டாட முடியும். காரணம் இந்த மூன்று மால்களில் மட்டும்தான் ஓரிரு காட்சிகளாகவாவது 100வது நாளுக்கு வந்திருக்கிறது. சுமார் 15 கோடியில் உருவான படம் 30 கோடி வசூலித்தாக விநியோகஸ்தர்கள் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இந்த வெற்றி குறித்து இயக்குநர்அட்லீ கூறியுள்ளதாவது, இந்த உலகத்தில் மிகவும் சந்தோஷப்படக்கூடிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடினாலே ஹிட் என்று கூறுகிறார்கள், அப்படி இருக்கையில் எனது படம், அதுவும் முதல்படமே 100 நாள் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த வெற்றி எனக்குள் மேலும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. எனது அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ராஜா ராணி கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதனிடையே ராஜா ராணி 100 நாள் வெற்றியை விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் ராஜா ராணி படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.