ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக சென்னை
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர்
இளையராஜாவுக்கு, இன்று மதியம் ஆஞ்சியோகிராம் சோதனை அளிக்கப்பட்டது.
ஒரே ஒரு இடத்தில் அடைப்பு இருந்ததை கண்டு பிடித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளித்து அந்த அடைப்பை சரி செய்தனர். இதையடுத்து, அவர் நலமாக உள்ளதாகவும், தொடர்ந்து 10 தினங்கள்
ஓய்வெடுக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக மருத்துவமனை
தகவல்கள் தெரிவிக்கின்றன.