ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தயாரிப்பாளர்களுக்கு நடிகர் விஜய், ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியதற்கு அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய இயக்குனர் வெங்கடேஷ் ( நிலாவே வா), எழில் (துள்ளாத மனமும் துள்ளும்), ஜெகன் (புதிய கீதை), செல்வ பாரதி (நினைத்தேன் வந்தாய், ப்ரிமானவளே), வின்சென்ட் செல்வா (ப்யமுடன்), ரவி (ஷாஜகான்) ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஜய் நன்கொடை அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; அவருக்கு மிகவும் நன்றி; தயாரிப்பாளர்களுக்கு உதவி செல்வதில் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜய் உள்ளார்; பாண்டியன் படத்தில் தம்முடன் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் குழுவினருக்காக ரஜினி அருணாச்சலம் படத்தில் நடித்துக் கொடுத்தார்; இது போன்று விஜய்யும் உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.