காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். அறிமுகமே பெரிய இயக்குனரின் படம் என்பதால் அப்படம் வெற்றி பெறாதபோதும் திரையுலகின் கவனத்துக்கு வந்தார் கெளதம். அதையடுத்து இப்போது வை ராஜா வை, சிப்பாய், என்னமோ ஏதோ உள்பட பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அப்பா கார்த்திக்கின் அறிவுரைப்படி நிறைய ஹோம் ஒர்க் செய்து நடித்து வரும் கெளதம், தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திக்கின் பெயரைக் காப்பாற்றும் வகையில் சினிமாவில் சாதிப்பதே எனது நோக்கம் என்கிறார். மேலும், இந்த சினிமாவுக்குள் நான் வருவதற்கு முன்பு அப்பா, சில அட்வைஸ்களை சொன்னார். அதில் ஒன்று எக்காரணம் கொண்டும் காதல் பிரச்னையில் சிக்கி விடக்கூடாது. அது உன் கேரியரையே கெடுத்து விடும் என்பது.
அதனால் காதல் விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். இப்போது நான் காதலிப்பதெல்லாம் சினிமாவை மட்டும்தான். அதனால் யாராவது நடிகைகள் என்னிடம் காதல்வயப்பட்டால் நான் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன். எந்த சந்தர்ப்பத்திலும காதல் வலையில் விழாமல் என்னை என் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வேன் என்கிறார் கெளதம்.
கெளதம் காதலில் விழுவாரா? மாட்டாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.