ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நகுலை வைத்து ‘கந்தக்கோட்டை’ படத்தை இயக்கிய சக்திவேல், தற்போது புதுமுகங்களை வைத்து ‘ஈகோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிட இருக்கிறது. படம் பற்றி இயக்குநர் சக்திவேல் கூறும்போது, வேலு, அனஸ்வரா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோ பேர் ஈஸ்வர், ஹீரோயின் பேர் கோமதி. இரண்டு பேரின் பெயரின் முதல் எழுத்தை எடுத்து படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாது இவர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ பிரச்னைகளும் படத்தின் தலைப்பாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை தான், ஆனால் முதன்முறையாக லவ் இல்லாமல் முயற்சி பண்ணியிருக்கோம். படம் செம ஜாலியாக வந்திருக்கு. தியேட்டருக்கு காசு கொடுத்து, டிக்கெட் வாங்கி படம் பார்த்துட்டு வெளியில வரும்போது ரசிகர்கள் அனைவரும் ஒரு சந்தோஷமான மன நிலையில் போவாங்க. அந்த நம்பிக்கை எங்க டீமில் இருக்கும் எல்லோருக்கும் இருக்கு என்கிறார் இயக்குநர் சக்தி.