ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒன்பதுல குரு படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாகி விட்டார் லட்சுமிராய். முனி-2 கங்கா படமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், தனது தாய்மொழியான கன்னட சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்ட லட்சுமிராய், இந்திப்படங்களுக்காகவும் சில மாதங்களாக முயற்சி எடுத்தார். ஆனால், மும்பையில் முகாமிட்டுள்ள அசின், இலியானா, தமன்னா, ஸ்ருதி போன்ற தென்னிந்திய நடிகைகளின் அதிரடி பிரவேசத்துக்கு நடுவே லட்சுமிராயினால் ஒரு அடிகூட முன்னுக்கு எடுத்து வைக்க முடியவில்லையாம்.
அதனால் பாலிவுட்டில் எடுக்கிற முயற்சி அனைத்தும் வேஸ்டுதான் என்று தானாகவே இப்போது பின்வாங்கி விட்டார் லட்சுமிராய். அதேவேகத்தில் மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார் நடிகை. அப்படி வந்திருப்பவர், இங்குள்ள தனது முந்தைய நாயகர்கள் சிலரை மடக்கத் தொடங்கியிருக்கிறார். அப்படி திரைக்குப்பின்னால் சிலரிடம் தனக்கு சிபாரிசு கோரி டார்ச்சர் கொடுத்து வரும் நடிகை, இப்போது அஜீத் பற்றியும் புகழ்பாடத் தொடங்கியிருக்கிறார்.
நான் ஜோடி சேர்ந்த நடிகர்களில் அஜீத்தான் பெருமைக்குரிய நடிகர். ரொம்ப அந்நியோன்யமாக பழகும் பண்பு கொண்டவர். மற்ற நடிகர்களிடமெல்லாம் நட்பு வைத்திருந்தாலும், அஜீத்திடம் மட்டும் நான் என் சொந்த வாழ்க்கை பற்றிய விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்வேன். அந்த அளவுக்கு எங்களது நட்பு ரொம்ப டீப்பானது என்றும் புதிய பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளார் லட்சுமிராய்.