பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இயக்குனர் பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் வயதும் 60 ஆகிவிட்டது. இந்நிலையில், 'வணக்கான்'க்கு பின் அடுத்த படத்தை இயக்க ரெடியாகி வருகிறார். அதற்கான கதை விவாதம் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் ஹீரோவாக நடிக்கவில்லை. தமிழக அளவில் புகழ்பெற்ற மூன்றெழுத்து வணிக குடும்பத்தை சேர்ந்த வாரிசு ஒருவரை ஹீரோ ஆக்குகிறாராம் பாலா. அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறாராம்.
விரைவில் பாலாவின் புதுப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. பாலாவின் முதற்பட ஹீரோ விக்ரம் 'வர்மா' பட பிரச்னைகள் காரணமாக இன்னமும் கோபத்தில் இருக்கிறாராம். இருவரும் பேசிக்கொள்வது இல்லை. பாலாவிடம் தொழில் பயின்ற அமீர், சசிகுமார் ஆகியோரும் கூட பாலாவிடம் நெருக்கமாக இல்லை.