கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

புகழ்பெற்ற தெலுங்கு நாடகம் 'என்ஜிஓ'. ஆந்திரா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்த நாடகம். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை பேசியதால் நாடகத்திற்கு பெரிய வரவேற்பு இருந்து. குமாஸ்தாவாக பணியாற்றும் ஒருவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போராடுவதுதான் நாடகத்தின் கதை. ஆச்சார்யா ஆத்ரேயா என்பவர் இந்த நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகம், 'குமாஸ்தா' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் சினிமா ஆனது. குமாஸ்தாவாக சித்தூர் நாகைய்யா நடித்தார், அவரது மனைவியாக ஜெயம்மா நடித்தார், தங்கையாக பண்டரிபாய் நடித்தார், வில்லனாக நரசிம்ம பாரதி நடித்தார்.
ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன், ஜி.ராமநாதன், நாகய்யா ஆகிய மூவரும் இசை அமைத்தார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். தமிழில் தோல்வி அடைந்த இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. நாடகம் போன்று படம் இல்லை என்ற விமர்சனமும் வந்தது.




