பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

சிவகுமார் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர் சத்யராஜ். சிவகுமாரின் உறவினரும்கூட. ஆரம்பத்தில் சிவகுமாரின் சிபாரிசில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ், பின்னர் வில்லன் வேடங்களில் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
வில்லனாகவே நடித்து வந்த அவரை ஹீரோவாக்கிய படம் 'சாவி'. கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்கிய இந்த படம் 'டயல் ய மர்டர்' என்ற அமெரிக்க படத்தின் தழுவல். இந்த கிரைம் திரில்லர் படத்தில் சத்யராஜுடன் சரிதா, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, கவுண்டமணி, அனுராதா, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.
முன்னாள் டென்னிஸ் வீரரான சத்யராஜ், சமூக ஆர்வலரும், பணக்கார பெண்ணுமான சரிதாவை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் சரிதா சகஜமாக எல்லா ஆண்களுடன் பழகுகிறவர் என்பதால் அவர்களில் யாராவது ஒருவர் மீது சரிதாவுக்கு காதல் வந்து விட்டால் என்ன ஆகும் என சந்தேகம் கொள்ளும் சத்யராஜ், சரிதாவுடன் நெருங்கி பழகும் ஆண்களை பழி வாங்குவது மாதிரியான கதை. படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. சத்யராஜின் நடிப்பு பேசப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.




