விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
மலையாள திரையுலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா மேனன். தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லது பாலிவுட்டிலும் நடித்துள்ளார். 1991ல் மலையாளத்தில் வெளியான அனஸ்வரம் என்கிற படத்தில் மம்முட்டியின் ஜோடியாக அறிமுகமானார். சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெயரையும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனனுக்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னுரிமை தந்து அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் அப்படி ஒரு அழகி போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது உலக அழகி ஐஸ்வர்யா ராயும் தானும் அழகுப் போட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்கிற புதிய ஆச்சரிய தகவலை அங்கே பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து ஸ்வேதா மேனன் கூறும்போது, “ஒரு நாள் நான் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய போது கோவையில் நடைபெறும் மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை என் தந்தை கொடுத்தார். அது அவருக்கு தெரியாமலேயே நான் விண்ணப்பித்து இருந்தது. அவருக்கு விருப்பமில்லை என்றாலும் கூட அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உறுதுணையாக இருந்தார். அப்போது மூன்றாவது ரன்னராக வந்தேன். அதன் மூலம் கேரளாவில் கொஞ்சம் பிரபலமானேன். படங்களில் நடிக்க தொடங்கிய பின்னரும் கூட இன்னொரு பக்கம் அழகி போட்டிகளில் கலந்து கொண்டேன். அந்த சமயங்களில் ஐஸ்வர்யா ராயும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது சில சமயம் அவருடைய ரூம் மேட் ஆகவும் அவருடன் நான் தங்கியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.