விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் |

மதராஸி படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பாகுபலி வில்லனான தெலுங்கு நடிகர் ராணா ஒரு கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் துபாயில் நடந்த சைமா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தாங்கள் இணைந்து நடித்த காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.




